உலகின் மிகப்பெரிய இந்து கோவில்

                         உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர் வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாகவுள்ளது. கெமர் சாம்ராஜ்யத்தின் மன்னன் 2-ஆம் சூர்யவர்மனால் இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மாண்டம் காண்பவர்களை அசரவைக்கும் திறன் படைத்தது. ஏறக்குறைய இதன் வெளிச்சுவர் 1,300 மீட்டர் நீளம், 1,500 மீட்டர் அகலம் என ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.



சூரிய, சந்திர கால சுழற்சியை கருத்தில் கொண்டு இந்த கோயில் வடிவமைக்கப்பட்டதே இதன் சிறப்பம்சம் என்கிறார்கள் கட்டட மற்றும் சிற்ப கலை நிபுணர்கள். பிரமாண்டத்திற்கும், சிற்பங்களின் அழகிற்கும் பாராட்டப்படும் இந்த சுற்றுலா தலம், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஆலயம் 14-ஆம் நூற்றாண்டில் கம்போடியா மீது அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட போர்களால் காடுகள் சூழப்பட்டு அடையாளம் தெரியாமல் மறைந்தது.

இதனை உலகிற்கு வெளிகொண்டு வந்த பெருமை ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும். 1860-ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுப்பிடித்த பிறகே அங்கோர்வாட் ஆலயம் பொலிவு பெற்று அதன் சிறப்பம்சங்கள் வெளிவந்தன.

அங்கோர்வாட் என்றால், கோயில் நகரம் என பொருள். இந்த அங்கோர்வாட் கோயில் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்து கோயிலான இதனை கட்ட 40 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.

படித்ததில் பிடித்தது...

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்

          ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்ல டா செல்லம் குறைவாக உள்ளது என்றார் அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

       


நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்க்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான்மேலும் அவன் தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன் அவன் கூறியது,

 "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டால், என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார். நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன்"

எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன், அனால் அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பால் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன்.
அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர் தினசரி ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது, "மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த தாய் மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்த்து என்றும் வந்த அந்த செய்தி"

மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி

இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரியில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்து விட்டால் என்று. நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அந்த பெண் சடலமாக இருந்தால் கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும் இருந்தது.

அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த சிறுவனின் தன் அன்னையிடமும் தங்கையிடம் வைத்து இருந்த அன்பும் பாசமும்
அப்படியே உள்ளது.

அனால் ஒரு குடிகாரன் போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது
 "தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்"

படித்ததில் பாதித்தது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More