ரஜினிகாந்த் - பெயர் காரணம்

'கெளரவம்' படத்தில் 'ரஜினிகாந்த்' என்ற பாத்திரமாக நடித்துச் சிறப்பித்தார் சிவாஜி.


இன்று ரஜினிகாந்த் 'சிவாஜி' என்ற பாத்திரமாக நடிக்கிற ஆச்சர்ய ஒற்றுமை...!.



'ரஜனி' என்ற சொல்லுக்கு இருட்டு, ஸ்த்ரீ, காய்ந்த மஞ்சள், மண்கலம் என்றெல்லாம் அர்த்தம் சொல்கிறது வடமொழி அகராதி. இதில் கருப்பையே தன் கவர்ச்சியாகக் கொண்டதால்தான் 'இரவின் நாயகன்' என்ற பொருள்பட 'ரஜினிகாந்த்' என்ற பெயர் வந்தது ரஜினிக்கு!.

'ஸ்டைல்' என்ற வார்த்தைக்கும் அகராதியில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழக சினிமா ரசிகர்களுக்கு ஒரே அர்த்தம் ..அது ரஜினி!.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?

தெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? 

  

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ------------------------------------------------------------------------ 

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது...

உலகின் மிகப்பெரிய இந்து கோவில்

                         உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர் வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாகவுள்ளது. கெமர் சாம்ராஜ்யத்தின் மன்னன் 2-ஆம் சூர்யவர்மனால் இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மாண்டம் காண்பவர்களை அசரவைக்கும் திறன் படைத்தது. ஏறக்குறைய இதன் வெளிச்சுவர் 1,300 மீட்டர் நீளம், 1,500 மீட்டர் அகலம் என ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.



சூரிய, சந்திர கால சுழற்சியை கருத்தில் கொண்டு இந்த கோயில் வடிவமைக்கப்பட்டதே இதன் சிறப்பம்சம் என்கிறார்கள் கட்டட மற்றும் சிற்ப கலை நிபுணர்கள். பிரமாண்டத்திற்கும், சிற்பங்களின் அழகிற்கும் பாராட்டப்படும் இந்த சுற்றுலா தலம், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஆலயம் 14-ஆம் நூற்றாண்டில் கம்போடியா மீது அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட போர்களால் காடுகள் சூழப்பட்டு அடையாளம் தெரியாமல் மறைந்தது.

இதனை உலகிற்கு வெளிகொண்டு வந்த பெருமை ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும். 1860-ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுப்பிடித்த பிறகே அங்கோர்வாட் ஆலயம் பொலிவு பெற்று அதன் சிறப்பம்சங்கள் வெளிவந்தன.

அங்கோர்வாட் என்றால், கோயில் நகரம் என பொருள். இந்த அங்கோர்வாட் கோயில் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்து கோயிலான இதனை கட்ட 40 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.

படித்ததில் பிடித்தது...

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்

          ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்ல டா செல்லம் குறைவாக உள்ளது என்றார் அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

       


நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்க்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான்மேலும் அவன் தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன் அவன் கூறியது,

 "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டால், என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார். நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன்"

எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன், அனால் அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பால் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன்.
அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர் தினசரி ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது, "மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த தாய் மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்த்து என்றும் வந்த அந்த செய்தி"

மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி

இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரியில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்து விட்டால் என்று. நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அந்த பெண் சடலமாக இருந்தால் கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும் இருந்தது.

அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த சிறுவனின் தன் அன்னையிடமும் தங்கையிடம் வைத்து இருந்த அன்பும் பாசமும்
அப்படியே உள்ளது.

அனால் ஒரு குடிகாரன் போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது
 "தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்"

படித்ததில் பாதித்தது.

ஆப்பிள் வளர்ந்த கதை




































ஹி . . . ஹி ....









நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது வாகன ஆவணங்கள் இல்லை என்றால் பிரச்சனை இல்லை!

உங்களுக்கு தெரியுமா ??... நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை... அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை... நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை... 15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது... இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை.... license இல்லையா vehicle papers இல்லையா... பணத்த எடுனு போலிஸ் சொன்னா... நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான்வாங்கிக்கோங்க..

 

நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே... தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்

விவசாயி கண்டுப்பிடித்த எலுமிச்சை ரகம்!


திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அந்தோணிசாமி என்ற எலுமிச்சை ரகம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்

 ‘‘நான் பார்த்தவரை எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போறதாகவும் இருந்துச்சு. 45 வருஷமா எலுமிச்சை சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தில கொத்துக்கொத்தா காய்க்குற நாட்டு எலுமிச்சையில 13 ரகங்களைத் தேர்ந்தெடுத்தேன். அதுல இருந்து ஒண்னை எடுத்துதான் இந்த புதிய ரகத்தை உருவாக்கினேன். இது இரண்டே வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுது."



 இதை மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் அகமதாபாத்துல இருக்கற ‘தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்க’த்துக்கு அனுப்பி வெச்சாரு. அவுங்க இதைப் பல கட்டமா சோதிச்சுப் பாத்தப்ப, இந்த ரகத்துல எல்லா காய்களும் ஒரே சீரா இருந்ததைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டாங்களாம்’’ என்கிறார் அந்தோணி சாமி!

 விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு.

 இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு. அந்தவகையில், ‘புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுறார்கள். காரணம், குறுகிய காலத்தில், இரசாயன உரம் இல்லாமல் நல்ல விளைச்சல் கொடுக்கிறது.

 பசுமை விகடன் இதழிலிருந்து....

நீங்கள் விரும்பும் வடிவில் மரம் வளர்க்கலாம்!

       மனிதர்களால் முடியாதது எதுவும் இல்லை இந்த உலகில் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த மரம் வளர்க்கும் கலை. இந்த கலையின் பெயர் "மரம் வடிவமைத்தல்" (Pooktre (or) tree training). இந்த பயிற்சின் மூலம் நாம் மரங்களை பல பயனுள்ள, கலை நயமிக்க உருவங்களில் வளர்க்கலாம். 
அதில் சில கண்கவரும் மரங்கள் உங்கள் பார்வைக்கு ....












பைக் - 2 வீலர் தொலைந்து போனால் உடனே கண்டுபிடிக்க ஓர் எளிய வழி!.

                திருடு போன உங்க பைக்கை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. ஓர் பழைய மொபைல் அல்லது ரூ.1000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு மொபைல்போன் போதும். திருடு போன பைக்கை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கான வழிமுறைகள் தொடர்ந்து காணலாம்....


குறைந்த விலையில் நீடித்த ஸ்டான்ட் பை பேட்டரி கொண்ட மொபைல்போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். சிறந்த நெட்வொர்க் கொண்ட தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் சிம் கார்டு ஒன்றையும் வாங்குங்கள். மொபைல்போனை சைலண்ட் மோடில் வைப்பதோடு, வைப்ரேஷன் மோடில் இருந்தால் அணைத்துவிடவும்.

மொபைல்போன் மீது தூசு, தும்பட்டிகள் படியாதவாறு பிளாஸ்டிக் பேப்பரை சுற்றிவிடுங்கள். மற்றொரு மொபைல்போனிலிருந்து அந்த போனுக்கு அழைத்து சரியாக இயங்குகிறதா என்று சோதித்து பாருங்க.அந்த மொபைல்போனை பைக்குகுள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்க அவ்வப்போது, பேட்டரி சார்ஜ் செய்ய எடுப்பதற்கு ஏதுவான இடத்தில் வைத்துவிடுங்க.

வாரத்திற்கு இருமுறையாவது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும். ஒருவேளை, பைக் திருடு போனால், 100 என்ற அவசர எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு மொபைல்போன் விபரத்தை தெரிவித்தால், 5 நிமிடங்களில் உங்களது பைக் வைக்கப்பட்டிருக்கும் மொபைல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து பைக் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More