சந்தா சிங் vs பந்தா சிங்

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

****************************


சந்தா சிங் 20 ரூபாய்க்கு லாட்டரி டிக்கட் வாங்கி 20 கோடி ஜெயிச்சார்... ஏஜன்ட் 9 கோடி வரி பிடிச்சது போக மீதம் 11 கோடி குடுத்தான், சர்தாருக்கு வந்ததே கோபம்

" ஒழுங்கா 20 கோடி பரிசு குடு இல்லைன்னா என்னோட 20 ரூபாய திருப்பிக் கொடு"


****************************

சந்தா சிங் ஒரு முறை ரயிலில் நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டார்.

ஒவ்வொரு முறை ரயில் நிற்கும் போதும், மேல் பர்த்திலிருந்து கீழே குதித்துக் கீழ் பர்த்திற்கு அடியில் தான் வைத்திருக்கும் சாமான்களையெல்லாம் சரி பார்த்து விட்டு மீண்டும் மேல் பர்த்திற்குப் போய் விடுவார்.

இது ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும் நடந்தது.

எரிச்சலடைந்த சக பயணி , "ஏனய்யா ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும், எங்கள் தலை அதிரும்படியாக இப்படிக் குதிக்கிறாய்?" என்று கேட்க

அவர் உடனே பதிலுரைத்தார்

"என்னை என்ன கேனையன் என்று நினைத்தாயா? அந்தப் போர்டைப் பார்த்துவிட்டுப் பேசு" , என்று ஒரு அறிவிப்புப் பலகையைக் காட்டினார்

அதில் இப்படி எழுதியிருந்தது.

ஓடும் ரயிலில் இருந்து குதிக்காதீர்கள்!
( Do not jump from the running train)

****************************

ஒரு போட்டி....யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும்னு...தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, சர்தார்ஜி, அசாமி, ஒரியான்னு பலர் கலந்துக்கிட்டாங்க.

மொதல்ல ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்க. அசாமிக்காரர் சிரிச்சுட்டார். அவுட். அடுத்து ஒரு ஆடு பத்துன ஜோக். அதுக்கு ஆந்திராகாரர். அடுத்தது ரயில் பத்துன ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி...அதுக்கு கன்னடன். இப்படி எல்லாரும் தோத்துட்டாங்க. 99 ஜோக் சொல்லும் போது சர்தார்ஜி மட்டுந்தான் மேடைல இருந்தார். சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது சர்தார் சிரிச்சுட்டார். மத்த சர்தார்களுக்குக் கோவம். ஏய்யா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க முடியாதான்னு....அப்ப சர்தார்ஜி சொன்னாராம்....."மொதல்ல சொன்ன பாட்டி ஜோக் ரொம்ப சூப்பர்".

****************************

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

****************************

ரெண்டு சர்தார் ஜி-க்களை நாசா நிலாவுக்கு ஆராய்ச்சி பண்ண அனுப்புறாங்க. ராக்கெட் போன பாதி தூரத்திலேயே ரெண்டு சர்தார்ஜியும் 'யூ' டர்ன் போட்டு திரும்பி வந்து நாசாக் காரங்களைப் பார்த்து திட்டுறாங்க.

"மிஷன் ஃபெயில்ட். ஏன்னா இன்னிக்கு அமாவாசை".

****************************
இங்கு உள்ள அனனத்தும் சுட்டது, கேட்டது, படித்து

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More